அதில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அவருக்கு வழங்கப்படும் எரிபொருள் கொடுப்பனவு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பளப் பட்டியலுடன் பேஸ்புக்கில் பதிவொன்றையும் வெளியிட்டுள்ள அர்ச்சுனா, இந்த அதிகரிப்பு தொடர்பாக பொதுமக்களிடம் கேள்வி எழுப்பியுள்ளார். இதே தொகையை 159 பாராளுமன்ற உறுப்பினர்களுடன் பெருக்கி பெலவத்தையில் உள்ள கணக்குகளுக்கு பணம் செலுத்தப்படுவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். முழுச் செய்தியை ஆதார இணைப்பில் வாசிக்கவும்.