இச்சடலம் அப்பகுதி மீனவர்களால் கண்டுபிடிக்கப்பட்டு, பொலிஸாருக்கு உடனடியாகத் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து விரைந்து சென்ற வங்காலை பொலிஸார் சடலத்தைக் கைப்பற்றி விசாரணைகளைத் ஆரம்பித்துள்ளனர். மீட்கப்பட்ட சடலம் மிகவும் உருக்குலைந்த நிலையில் இருப்பதால், இதுவரை இறந்தவர் யார் என்ற விவரம் தெரியவரவில்லை. கடலுக்குச் சென்று காணாமல் போன உள்ளூர் மீனவரா அல்லது கடல் நீரோட்டத்தில் அடித்துவரப்பட்ட இந்திய மீனவரா என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். முழுச் செய்தியை ஆதார இணைப்பில் வாசிக்கவும்.