க.பொ.த உயர்தர (A/L) பரீட்சை வினாத்தாள்கள் கசிந்துள்ளதாகப் பரவி வரும் தகவல்கள் குறித்து கல்வி அமைச்சும் பரீட்சைகள் திணைக்களமும் தங்களது விளக்கத்தை அளித்துள்ளன. இது போன்ற செய்திகளால் பரீட்சார்த்திகள் எவரும் தேவையற்ற வகையில் அச்சம் கொள்ளத் தேவையில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. திட்டமிட்டபடி வழமை போல் உயர்தரப் பரீட்சை தொடர்ந்து நடைபெறும் என பரீட்சைகள் திணைக்களம் திட்டவட்டமாகச் சுட்டிக்காட்டியுள்ளது. எனவே, மாணவர்கள் எவ்வித குழப்பமும் இன்றி தமது பரீட்சைகளை எழுத முடியும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.