மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை முன்னறிவிப்பு
15 ஆகஸ்ட், 2026 அன்று 11:06 PM
இலங்கையின் சில மாகாணங்களிலும் மாவட்டங்களிலும் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என்றும், சில பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

2026 ஓகஸ்ட் 15ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்ட வானிலை முன்னறிவிப்பின்படி, சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்ய வாய்ப்புள்ளது. அத்துடன் ஊவா மாகாணத்திலும், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர வடமத்திய, வடமேல், மத்திய மற்றும் தென் மாகாணங்களிலும், திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடும் என வானிலை முன்னறிவிப்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது.